மவ்லவி உமர் அலிக்கு பகிரங்க முபாஹலா அழைப்பு! - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Tuesday, July 18, 2017

மவ்லவி உமர் அலிக்கு பகிரங்க முபாஹலா அழைப்பு!



மவ்லவி உமர் அலிக்கு பகிரங்க முபாஹலா அழைப்பு!

ஜமாஅதுல் முஸ்லிமீனை விட்டும் வெளியேறிய நாள் முதல் இன்று வரை சரியான ஒரு கொள்கையை ஆதாரங்களுடன் முன்வைக்க முடியாமல் மவ்லவி உமர் அலி தடுமாறிக்கொண்டிருக்கின்றார். “அல்லாஹ்வுக்கு மாறு செய்தாலும் காபிராகுவது இல்லை: அமீருக்கு மாறு செய்தால் காபிராகி விடுவான்” எனக் கூறி ஏறக்குறைய ஐந்து வருடங்கள் அவர் அமீரைத் தக்லீத் செய்தார். இவ்வாறு பதவிக்காக தீனை விற்று ஐந்து வருடங்களாக அமீரைத் தக்லீத் செய்து கொண் டிருந்த மவ்லவி உமர் அலியை அவரது உலகளாவிய அமீர் ஓரம் கட்டுகின்ற கேவலத்தை அல்லாஹ் ஏற்படுத்தினான். உடனடியாக உலகளாவிய அமீரிலே ஐம் பத்து மூன்று ஷிர்க்குகள் எனக் கூறி இப்போது அவரைக் காபிராக ஆக்கியுள்ளார்.

மவ்லவி உமர் அலி மஸ்ஊதி மத்ஹபாக ஜமாஅதுல் முஸ்லிமீனிலிருந்து வெளியேறினார். பின்னர் மஸ்ஊதி மத்ஹபிலிருந்தும் வெளியேறி: ஜமாஅதுல் முஸ்லிமீனின் பெயரால் ஒரு  ஹவாரிஜிய்யக் ‘வெளியேறியோர்’ கூட்டத்தை உருவாக்கினார். அந்த ஹவாரிஜிய்யக் கூட்டம் மார்க்க அறிவில்லாத பாமரர்க ளின் “சூராக் குழு” எனும் அமைப்பினால் வழிநடாத்தப்படுவதே இவரது வழி கேட்டை மிக எளிதாக அடையாளம் காணுவதற்கான சான்றுகளில் ஒன்றாகும்.

ஜமாஅதுல் முஸ்லிமீனின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டி ருக்கும் மவ்லவி உமர் அலியை அவர் குப்ரிலே சென்ற நாள் முதல் இந்த நிமிடம் வரைக்கும் நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்துக் கொண்டே இருக்கின் றோம். ஆனால் அவரது வழிகேட்டை நேரடியாக நிரூபிக்கும் எமது எந்தவொரு சவாலையும் அவர் ஏற்காமல் ஓடி ஒளித்துக் கொண்டே இருக்கிறார். “இரண்டு ஒரு நாள் கலந்துரையாடல்களை நடாத்திட தயார்” என ஒப்பந்தம் செய்துவிட்டு அதில் ஒன்றைக்கூட முழுமையாக நடாத்த விடாமல் பொது மக்களைத் தூண்டி குழப்பத்தை உண்டு பண்ணினார். “முர்தத்களுடன் கதைப்பது ஹராம்” என்பதே விவாதத்திற்கு வராமல் நழுவுவதற்கு அவர் முதலில் கூறிய நொண்டிச்சாட்டு. அது எடுபடாத நிலையில் அவரது பொய்களும், வழிகேடும் வெளிப்படாதிருக்க இப்போது அவர் முபாஹலாவின் பெயரால் நழுவ முற்பட்டிருக்கின்றார்.

மூன்று விடுத்தம் “மஸ்ஊத் அஹ்மத் மீண்டும் தோற்றுவித்தது நேர்வழியே” என மவ்லவி உமர் அலி அழிவுச் சத்தியம் செய்து விட்டார். அதே மவ்லவி உமர் அலி இப்போது “மஸ்ஊத் அஹ்மத் மீண்டும் தோற்றுவித்தது வழிகேடு” என அழிவுச் சத்தியம் செய்ய அனைவரையும் அழைக்கின்றார் 

“முபாஹலா” என்பது பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை வேண்டி செய்யப்படும் சத்தியமாகும். எனவே அதில் ஈடுபடும் இரு சாராரும் மறு தரப்பின ரின் பொய்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியம். அதற்கமைய குறிப் பிட்டதொரு நாளில் காலை ஒன்பது மணிக்கு துவங்கி மாலை ஐந்து மணி வரை சம அளவில் நேரத்தைப் பகிர்ந்து கொண்டு எதிர்த் தரப்பாரின் பொய்களை ஆதா ரத்துடன் தெளிவு படுத்திவிட்டு அழிவுச் சத்தியம் செய்ய மவ்லவி உமர் அலியை ஜமாஅதுல் முஸ்லிமீனாகிய நாம் பகிரங்கமாக அழைக்கின்றோம். இதற்கு மவ்லவி உமர் அலி தயார் என்றால் முபாஹலா ஒப்பந்தத்தைச் செய்வதற்கு உடனடியாக ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். 

குறிப்பு: முபாஹலாவின் பின்னர் விவாதிக்க முடியாது என இஸ்லாத்தில் சட்டம் கிடையாது.

வெளியீடு : ஜமாஅதுல் முஸ்லிமீன்.



No comments:

Post a Comment